சென்னை: விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் முழுமையாக லீக் ஆன சம்பவத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை, “இது ரொம்ப தப்பு. போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோதான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். 3-4 நிமிடம் படம் லீக் ஆனதாக சிலர் கூறுகின்றனர். சிலர் முழு படம் என்று சொல்கின்றனர். நான் தேர்தலுக்கு பிறகு ஜனநாயகன் படத்தை தியேட்டரில் போய் பார்ப்பேன்” என்றார்.
மேலும், “பாஜவுக்கு இதில் தொடர்பில்லை. முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்கள். உங்களுக்கு வந்தாலும் டெலிட் செய்யுங்கள். தியேட்டர் போய்தான் பார்ப்பேன்” என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஜனநாயகன் லீக்..! வலுக்கும் கண்டனம்... விசாரணையை தீவிரப்படுத்திய சைபர் கிரைம் போலீஸ்..!
அவர் தொடர்ந்து, “ஆதவ் அர்ஜுனா தேவையில்லாமல் பாஜவையும், மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரையும் இழுக்கிறார். தவெக தேவையில்லாமல் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரை இழுக்கக் கூடாது. அது அரசியல் அநாகரிகம். யார் தப்பு செய்தார்களோ, போலீசில் புகார் கொடுத்து அவர்களை உள்ளே கொண்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டுங்கள். அரசியல் லாபத்திற்காக ஏன் தேவையில்லாமல் பாஜவை இழுக்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

பொதுமக்களுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்தார். “பொதுமக்கள் யாரும் இந்த மாதிரி வீடியோவில் படம் வந்தாலும் பார்க்காதீங்க. அது எத்தனையோ பேரின் உழைப்பு, ரத்தம், வியர்வை, புரொடக்ஷன் கம்பெனியின் பணம். வந்தாலும் skip செய்துவிட்டு போய்விடுங்கள். முட்டிக்கு முட்டி தட்டுங்கள். யாரும் அந்த வீடியோவை அனுப்பினாலும் பார்க்காதீர்கள்” என்றார்.
ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் ஏற்கனவே இந்த லீக் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த உரை தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சாகியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், ‘ஜனநாயகன்’ லீக் விவகாரம் அரசியல் பேச்சுக்கு திருப்பம் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் அரெஸ்ட் பண்ணுங்க..! ஜனநாயகம் படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு காட்சி..? போலீசில் புகார்..!