சென்னை: தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பரவல் வேகம் எடுத்துள்ளது. சென்னை அடையாறில் ஜனவரி 5-ம் தேதி காக்கள் கோத்துக் கோத்தாக செத்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆய்வில் அவை H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸால் இறந்தது உறுதியானது. இதையடுத்து, கால்நடைத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
தற்போது சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காக்கள், கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகள் கோத்துக் கோத்தாக இறந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இதே நிலை காணப்படுகிறது. அனைத்து இடங்களிலும் ஆய்வு முடிவுகள் பறவைக் காய்ச்சல் (Avian Influenza) தொற்றால் இறப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
இதனால் பொது சுகாதாரத் துறை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. “எந்த இடத்தில் பறவை இறந்து கிடந்தாலும் அலட்சியப்படுத்த வேண்டாம். வெறும் கையால் தொட்டு அப்புறப்படுத்தக்கூடாது.
இதையும் படிங்க: பறவைக்காய்ச்சல் எதிரொலி! சென்னையில் செத்து மடியும் காகங்கள்! தமிழக பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?
கையுறை, முகக்கவசம் அணிந்து, காலணி அணிந்து மட்டுமே கையாள வேண்டும். உடனடியாக அருகிலுள்ள கால்நடைத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். அவர்கள் கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பாக உடலை அப்புறப்படுத்துவார்கள்” என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள், பறவைகள் வளர்ப்போர் தங்கள் பறவைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஏதேனும் அசாதாரண இறப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் குறைவு என்றாலும், தொற்று ஏற்பட்டால் ஆபத்தானது என்பதால், கால்நடைத் துறை சிறப்பு கண்காணிப்பு குழுக்களை அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு, பறவைகள் அழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அச்சமின்றி, ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? ராகுல்காந்திக்கு தலைவலி! டெல்லிக்கு டிக்கெட் போடும் முக்கிய நிர்வாகிகள்!