மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறுகிறது. மாவட்டங்களின் செயல்திறன் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்ட மாநாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் "வெற்றி தமிழகம்" தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று, ஜூன் 29ஆம் தேதி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பான திட்டங்கள் குறித்து ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆன பிறகு முதல் முறை... கரூர் செல்கிறார் ஜோசப் விஜய்... எப்போது தெரியுமா?
இன்றைய முதல் அமர்வில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், "போதையில்லா தமிழ்நாடு" திட்டம் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
நாளைய அமர்வில் பசுமை தமிழ்நாடு திட்டம், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் குற்றத் தடுப்பு, சாதி மோதல் தடுப்பு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, சட்டவிரோத மணல் மற்றும் கனிமக் கடத்தல் தடுப்பு, கொள்ளைத் தடுப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கான தனி அமர்வில் 28 துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வீட்டுமனைப் பட்டா வழங்கல், மாணவர் விடுதிகள், வேளாண்மையில் விவசாயிகள் பதிவு, டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு, விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், கால்நடை பராமரிப்பில் தெருநாய்கள் கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
இரண்டு நாள் மாநாடு மூன்று அமர்வுகளாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு திட்டங்களை குறித்த காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் இலக்குகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட வாரியான செயல்திறன் திட்டங்களின் முன்னேற்றம், மக்கள் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான துறைவாரியான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நீர்வளத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித் துறையில் 100 சதவீத மாணவர் சேர்க்கை, ஊரக வளர்ச்சித் துறையில் அனைவருக்கும் குடிநீர், வீட்டு வசதி, சுய உதவிக்குழுக்கள் மேம்பாடு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் இணையவழி பட்டா வழங்கல், சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சிக்கான கடன் வழங்கல், தொழிலாளர் நலத்துறையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு முகாம்கள், உயர்கல்வித் துறையில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
குறிப்பாக, முதல் நாளான இன்று 28 துறைகளின் செயல்திட்டங்கள் மற்றும் "வெற்றி தமிழகம்" தொலைநோக்கு ஆவணத்தின் அடிப்படையில் மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் விரிவாக ஆய்வு மேற்கொள்கிறார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அம்சங்கள் நாளைய அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இன்றைய முதல் அமர்வில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் "போதையில்லா தமிழ்நாடு" திட்டம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: #BREAKING அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்... பின்னணி என்ன?