கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வந்த மாணவி பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், திமுக தமிழக வெற்றிக்கழக அரசை கடுமையாக சாடியுள்ளது.
முதலமைச்சர் விஜயின் இந்த துர்நாற்ற சக்தி ஆட்சி இருமாதங்களை கடப்பதற்குள்ளே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்களுக்கு பாதுகாப்பு என கட்டிய பொய்கோட்டைகள் அனைத்தும் பொல பொலவென உதிர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது. நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. இதன் உச்சமாக இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி, விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டது.

இதற்கு முன்பு கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்ன தெரிவித்துள்ள திமுக, கோவையில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார். ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல் போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இதையும் படிங்க: ஆபத்தான ஆற்றுக்குளியல்... இல்லாத போலீஸ் பாதுகாப்பு! வால்பாறையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்!
தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பட்டியலிட்டுள்ளது.இந்த துயர சம்பவங்கள் ஒருபுறம் எனில், 60 வயது மூதாட்டி முதல் ஆறு வயது சிறுமி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் வாய்கிழிய வசனம் பேசும் சேடிச முதலமைச்சர் விஜய், வெறும் வாயில் வடை சுடாமல், ரீல்ஸ் மூலம் பேருக்கு சிங்கப்பெண் ஆய்வு செய்யாமல் உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் உங்கள் செயல் திட்டத்தை காட்டுங்கள் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை.. தற்போது சாத்தியமில்லை..!! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!!