அதிமுகவின் ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், பிரசாத் ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000க்கு விற்றதாகவும், ஸ்ரீகாந்த் 40 முறை இவரிடம் போதைப்பொருள் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிரசாத்திடமிருந்து ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியது செல்போன் மூலம் அம்பலமானது. நடிகை ஸ்ரீகாந்தியின் செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்ததில் பிரசாத்திடம் பேசியது, பணம் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ரூ.4 லட்சத்துக்கு கொக்கைன்.. வசமாக சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்.. புழல் சிறையில் அடைத்த போலீஸ்..!

பின்னர் கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் போதை பொருள் பயன்படுத்துவது உறுதியானது. இதன் பிறகு நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது தான் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த், தன் மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அப்போது, போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: போதைப் பொருள் விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!