அரக்கோணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் 200 இடங்களில் வெற்றியென முதலமைச்சர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாகவும் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என உறுதிப்பட கூடிய எடப்பாடி பழனிச்சாமி, மூ காட்சியில் ஒரு மாவட்டத்தையாவது உருவாக்கி இருக்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!எடப்பாடி அட்டாக்...

ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகுவதற்கு அதிமுக அரசு தான் காரணம் என்றும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாக குற்றம் சாட்டினார். அதிமுக கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை திமுக முடக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புது உறுப்பினர்கள் தான் TARGET.. முதல்வர் தலைமையில் தொடங்கிய மா. செ. கூட்டம்!