×
 

உயிர் தப்பி இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 160 இந்தியர்கள்..! உற்சாகமாக வரவேற்ற உறவினர்கள்..!

இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்துள்ளனர்.

மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். 

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 11வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகளை சுமந்து சென்று, ஈரானின் அணு கூடங்கள், ராணுவ தளங்கள், ராணுவ அதிகாரிகளின் இருப்பிடங்களை தேடி கண்டுபிடித்து இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு வீசி வருகின்றன.

இதையும் படிங்க: 900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!

பதிலுக்கு தரையில் இருந்து பறந்து சென்று தரைப்பகுதியை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த க்ரூஸ், பாலிஸ்டிக், ஹைபர் சோனிக் ஏவுகணை ரகங்களை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்கி வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஈரானில் 300 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு இழப்பு இல்லை. ஈரானோடு ஒப்பிடும் போது இஸ்ரேல் முக்கியமான எந்த கட்டுமானங்களையும் இழக்கவில்லை.

இதுவரை 25க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தனைக்கும் கொத்து கொத்தாக ட்ரோன்கள், 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி இருக்கிறது. போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரானில் வசித்து வரும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவை சேர்ந்த பலர் ஈரானில் தங்கி கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. ஈரானில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், நேற்று மேலும் 280 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஈரானின் மெஹன் விமானம் மூலம் டெல்லிக்கு வந்தனர். 

இந்த நிலையில், இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் பேருந்துகள் மூலமாக ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர்.  பின்னர் ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்துள்ளனர். டெல்லி வந்தடைந்தவர்களை அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதையும் படிங்க: 6 ஏர்போர்ட் மீது அட்டாக்.. இறங்கி அடிக்க துவங்கிய இஸ்ரேல்.. ஈரான் மீது குண்டு மழை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share