×
 

உங்க தப்பால தான் எல்லாமே நடந்துச்சு! அத்தனையிலும் அரசியல்! மோடியை வெளுத்துவிட்ட மம்தா!

பிரதமர் மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் நம் முப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டசபையில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் அலட்சியம் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். 

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தவறியதற்காக பாஜக அரசு, ராஜினாமா செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: பயங்கரவாதத்தை ஒழிக்கும் வரை சிந்து நதி பேச்சுக்கே இடமில்லை.. பாகிஸ்தானுக்கு இந்தியா கறார் பதில்..!

இந்தக் கொடூரமான தாக்குதல் நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. நமது வீரர்கள் ஒப்பிடமுடியாத துணிச்சலைக் காட்டிய போதிலும், மீண்டும் மீண்டும் நிகழும் பாதுகாப்பு மீறல்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதில் அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது.

பயங்கரவாதிகளுக்க எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில் நம் முப்படைகளின் வீரம் வெளிப்பட்டது. அவர்கள் தங்கள் திறமையையும், வீரத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்த விவகாரத்தின் மத்திய பாஜ அரசு அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. முப்படைகளின் வீரத்தை அரசியலாக்குவதா?

பஹல்காமுக்கு வந்த பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தனர். அவர்களுக்கு ஆயுதம் எப்படி கிடைத்தது. புகழ்பெற்ற சுற்றுலா மையத்தில் ஒரு போலீஸ் கூட இல்லாதது ஏன்? அங்கு பாதுகாப்பு குறைபாட்டுக்கு யார் காரணம்? தாக்குதல் நடத்திய பங்கரவாதிகள் எங்கு சென்றார்கள். அவர்கள் கைது செய்யப்படாதது ஏன்? 

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிக்கின்றன.

பிரதமர் மோடி தன்னைப் பற்றி விளம்பரப்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த ராணுவ மோதலின் போது, ​​பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது

மத்திய பாஜ அரசின் அலட்சியே பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது. இது அரசின் மாபெரும் தோல்வி. நமது துாதரக நடவடிக்கைகள் எந்த அளவு பலன் அளித்தன என்பது தெரியவில்லை. உலக அரங்கில் நம் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தும், சர்வதேச நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் நிதி உதவி பெற்றுக்கொண்டு தான் உள்ளது என மம்தா பானர்ஜி பேசினார். 

பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு நாடு முழுதும் ஒத்துழைப்பு கிடைத்தது. அரசியல் வேறுபாடுகள், இனம், மொழி, மதம் கடந்து ஒட்டுமொத்த மக்களும் மத்திய அரசை ஆதரித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாடு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விளக்கப்பட்டது.

அப்போதும், அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்பதாக கூறினர்.நம் நிலைப்பாட்டை உலக அரங்கில் விளக்கும் எம்பிக்கள் குழுவில் திரிணாமுல் எம்பி அபிஷேக் பேனர்ஜியும் இடம் பெற்றார். பல்வேறு நாடுகளுக்கு சென்று, பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நிலைப்பாடு, மத்திய அரசின் நடவடிக்கையை விளக்கினார். 

இந்த நிலையில், தற்போது மேற்கு வங்க சட்டசபையில் முதல்வர் மம்தா மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

இதையும் படிங்க: பயிரெல்லாம் காயுது! தயவு செஞ்சு தண்ணி கொடுங்க! ஒரு மாதத்தில் 3 கடிதம் எழுதி கெஞ்சும் பாக்.,

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share