×
 

பயிரெல்லாம் காயுது! தயவு செஞ்சு தண்ணி கொடுங்க! ஒரு மாதத்தில் 3 கடிதம் எழுதி கெஞ்சும் பாக்.,

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதால் பாகிஸ்தான் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளது.

1960ல் உலக வங்கி முன்னிலையில் சிந்து நதி நீர் பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றில் இருந்து பாகிஸ்தானுக்கு 80 சதவீத தண்ணீர் கிடைக்கிறது.

20 சதவீத நீர் இந்தியாவுக்கு பயன்படுகிறது. பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 21 சதவீத ஜிடிபியானது, இந்த நதிகளின் நீர் பாசனத்தால் பயன்பெறும் விவசாயத்தில் இருந்து கிடைக்கிறது.  இதனால் பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் ஒப்பந்தம் மிகவும் முக்கியம்.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது என பிரதமர் மோடி அதற்கு விளக்கம் அளித்தார்.  இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மத்திய அரசு அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. 

குறிப்பாக மே 10ம் தேதி இந்தியா நடத்திய மிகப்பெரிய அட்டாக், இப்போதும் உலக அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு பிறகு தான் சண்டையை நிறுத்தலாம் என்று இந்தியாவிடம் அடிபணிய ஆரம்பித்தது பாகிஸ்தான்.சண்டையை நிறுத்தக்கோரி பாகிஸ்தான் கெஞ்சியதை அடுத்து, இந்தியா சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் சிந்து நதிநீரை இந்தியா தற்போதும் நிறுத்தி வைத்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதால் பாகிஸ்தான் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசு மத்திய அரசின் ஜல் சக்தி துறைக்கு கடந்த மே 10ம் தேதி முதல் 4 கடிதங்களை எழுதி உள்ளது. 

அந்தக் கடிதங்கள் மத்திய ஜல் சக்தி துறைக்கு கிடைத்திருக்கிறது. அவை மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன என்று ஜல் சக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் ரபி பருவ பயிர்கள், இந்தியாவின் ஒப்பந்த நிறுத்தத்தால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஒப்பந்த நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்யும்படி கோரி வருகிறது.

இதையும் படிங்க: சசிதரூர் மேஜிக் சக்சஸ்.. பயங்கரவாதத்தை வேரறுக்க துணைநிற்போம்.. இந்தியாவுக்கு அமெரிக்கா சப்போர்ட்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share