×
 

பாலியல் அத்துமீறல் விவகாரம்! அதிபர் ட்ரம்புக்கு சிக்கல்! ரூ.55 கோடி இழப்பீடு தர உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் அவதுாறு வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு, 55 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குமாறு நியூயார்க் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் அவதூறு வழக்கில் தொடரப்பட்ட வழக்கில், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு 55 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு நியூயார்க் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1996-ம் ஆண்டு மன்ஹட்டனில் உள்ள ஆடம்பர ஆடைக்கடையின் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஜீன் கரோல் குற்றம் சாட்டியிருந்தார். இதை மறுத்த டிரம்ப், பொதுவெளியில் கரோலை பொய்யர் என்று விமர்சித்தார். இதனால் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

2023-ம் ஆண்டு சிவில் நீதிமன்ற நடுவர் குழு, டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்து சுமார் 48 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. டிரம்ப் மேல்முறையீடு செய்ததால் இந்தத் தொகை நீதிமன்றப் பாதுகாப்பில் இருந்து வந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட நிலையில், கீழமை நீதிமன்ற தீர்ப்பு உறுதியானது.

இதையும் படிங்க: ஈரான் - அமெரிக்கா போர்! குட் நியூஸ் சொன்னார் ட்ரம்ப்! இந்த வார இறுதியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து?!

இந்நிலையில், வழக்கை நீண்டகாலம் இழுத்தடித்ததாகக் கூறிய நீதிபதி, வட்டியுடன் சேர்த்து மொத்தம் 55 கோடி ரூபாயை உடனடியாக ஜீன் கரோலுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார். டிரம்பின் வழக்கறிஞர்கள் அவசர மனு தாக்கல் செய்தபோதும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை நிராகரித்து, பணம் வழங்குவதற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதித் தீர்ப்பு டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜீன் கரோல் (82) மற்றும் டிரம்ப் (80) இடையேயான இந்த சட்டப் போராட்டம் அமெரிக்க ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தத் தீர்ப்பு அதிபர் டிரம்பின் நிர்வாகத்துக்கு சட்டரீதியான சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிரம்ப் தரப்பு மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைக்கு ஜீன் கரோல் இழப்பீடு தொகையைப் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share