போரில் வெளிப்படும் குரூர முகம்.. ஈரானின் இரக்கமற்ற செயலால் கொதிப்பில் இஸ்ரேல்..!
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனையை குறிவைத்து ஈரான் தாக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் சூழல் மோசமாகி வரும் நிலையில், 7 நாட்களாக மாறி மாறி கடுமையாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அமெரிக்கா மற்றும் ஈரானிடையேயான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானுக்கு எதிராக திரும்பியிருக்கிறது அமெரிக்கா. எனவே, கடந்த ஓரிரு நாட்களாக அமெரிக்கா இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரான் அதிபரை ‘நிபந்தனையின்றி சரணடைய’ வலியுறுத்தி டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
அவர் இப்போது மிக எளிதான இலக்காகவும் இருக்கிறார். அதே சமயம், அவர் பாதுகாப்பாகவே இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு வெளியே கொண்டுவரப் போவதில்லை (கொல்லப்போவதில்லை). பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எங்கள் பொறுமை குறைந்துகொண்டே போகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: சாக தயாராகுங்கள்! எந்த நாடும் தடுக்க முடியாத செஜ்ஜிஸ் ஏவுகணை..! இஸ்ரேல் மக்களுக்கு ஈரான் வார்னிங்..!
இந்நிலையில், கோட்டை வாயிலில் படைகள் வாள் ஏந்தி நிற்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிவிட்டார். அவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போர் தொடங்குகிறது. பிராந்திய பயங்கரவாதத்துக்கு எதிராக பலத்துடன் இயங்க வேண்டும், சமரசத்துக்கு வாய்ப்பில்லை. டெல் அவிவ் மீது Fattah-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அழைப்பு விடுத்த போதிலும், இரு நாடுகளும் மாறி, மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் இஸ்ரேலை நோக்கி இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தற்போது, ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்து இருப்பது போர் இன்னும் உக்கிரம் அடையும் என்பதை உலக நாடுகளுக்கு தெரிவித்தது.
இந்த நிலையில் ஈரான் உச்ச தலைவர் தெரிவித்தது போலவே ஈரான் இராணுவ படைகள் போரில் இரக்கமற்ற நிலையில் செயல்பட துவங்கி உள்ளன. இஸ்ரேலில் உள்ள மருத்துவமனையை குறிவைத்து ஈரான் தாக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரானால் குறிவைக்கப்பட்ட சொரோகா மருத்துவ மையம், இஸ்ரேலின் தெற்கில் உள்ள முக்கிய மருத்துவமனையாகும், மேலும் 1,000 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்டுள்ளது மற்றும் அப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு அந்த மருத்துவமனை சேவைகளை வழங்குகிறது.
இதுகுறித்து தெரிவித்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர், மருத்துவமனைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். காயங்கள் உட்பட சேதத்தை நாங்கள் தற்போது மதிப்பிட்டு வருகிறோம். இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கூறினர்.
இதையும் படிங்க: ஈரான் தாக்குதலால் அசிங்கப்பட்டு போன இஸ்ரேல்.. வியாபார புத்தியை காட்டிய அமெரிக்கா..!