ஈரான் தாக்குதலால் அசிங்கப்பட்டு போன இஸ்ரேல்.. வியாபார புத்தியை காட்டிய அமெரிக்கா..!
இஸ்ரேலின் F35 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்த உள்ள நிலையில் போர் விமானத்திற்காக ஆர்டரை பாதியாக குறைத்துள்ளது அமெரிக்கா.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் சூழல் மோசமாகி வரும் நிலையில், கடந்த 5 நாட்களாக மாறி மாறி கடுமையாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அமெரிக்கா மற்றும் ஈரானிடையேயான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானுக்கு எதிராக திரும்பியிருக்கிறது அமெரிக்கா. எனவே, கடந்த ஓரிரு நாட்களாக அமெரிக்கா இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் - ஈரான் இரு நாடுகளும் மாறி மாறி தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் 28 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரம் ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அணு கட்டமைப்புகள், ராணுவ தளங்களில் ஈரான் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
அதோடு முக்கியமான அணு விஞ்ஞானிகள், பிராதன படை தளபதிகளையும் ஈரான் இழந்தது. எல்லாவற்றுக்கும் மேல் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனிக்கும் இஸ்ரேல் குறி வைத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இதையும் படிங்க: இஸ்ரேலை சின்னாபின்னமாக்க காமெனி கையில் எடுத்த ஆயுதம்..! ஹைபர் சோனிக் Fattah-1 என்னும் ஏவுகணை அரக்கன்..!
ஈரான் அதிபரை ‘நிபந்தனையின்றி சரணடைய’ வலியுறுத்தி டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத காமெனி போர் துவங்கியது. இனி சமரசத்திற்கு இடமில்லை என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் பாதாள குழியில் பதுங்கி இருக்கும் ஈரான் உச்ச தலைவர் கமெனி, இஸ்ரேலுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதை ஏற்று நள்ளிரவில் 11வது ரவுண்ட் ஏவுகணை அட்டாக்கை நடத்திய ஈரானின் புரட்சிகர ராணுவ படை, தங்களின் முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்தது. அதிசக்தி வாய்ந்த Fattah-1 ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது.
நள்ளிரவு 12:40 மணிக்கு 15 ஏவுகணைகள் மத்திய இஸ்ரேலை தாக்கின. அடுத்த 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் 5 ஏவுகணைகள் வந்தன. Fattah-1 ரக ஏவுகணையை வைத்து இஸ்ரேலை பந்தாடி விட்டோம். இஸ்ரேலால் அவற்றை இடைமறிக்க முடியவில்லை. இஸ்ரேலின் வான் பரப்பு எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று ஈரானின் புரட்சிகர ராணுவ படை அறிவித்தது.
இதுமட்டுமா, இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவித்துள்ளது ஈரான். ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு என்றும் ஈரான் கூறியது. ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, திங்களன்று மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான் என்றும் அது கூறியது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்து வருகிறது.
தற்போது ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான ஆர்டரை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.
F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாகக் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க: Whatsapp-ஐ Uninstall பண்ணுங்க.. ஈரான் மக்களுக்கு அரசு திடீர் ஆர்டர்.. காரணம் இதுதான்!