×
 

சாக தயாராகுங்கள்! எந்த நாடும் தடுக்க முடியாத செஜ்ஜிஸ் ஏவுகணை..! இஸ்ரேல் மக்களுக்கு ஈரான் வார்னிங்..!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு மையத்தை தகர்த்து சென்று தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளை ஈரான் செலுத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஈரான் இரு நாடுகளும் 7வது நாளாக மாறி, மாறி தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகளை சுமந்து சென்று, ஈரானின் அணு கூடங்கள், ராணுவ தளங்கள், ராணுவ அதிகாரிகளின் இருப்பிடங்களை தேடி கண்டுபிடித்து இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு வீசி வருகின்றன.

பதிலுக்கு தரையில் இருந்து பறந்து சென்று தரைப்பகுதியை தாக்கி அழிக்கு சக்தி வாய்ந்த க்ரூஸ், பாலிஸ்டிக், ஹைபர் சோனிக் ஏவுகணை ரகங்களை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்கி வருகிறது.

கொத்து கொத்தாக ட்ரோன்களை அனுப்பியும் இஸ்ரேலில் ஈரான் குண்டு மழை பொழிகிறது. இஸ்ரேல் குண்டு வீச்சை ஈரானால் பெரிய அளவில் தடுக்க முடியவில்லை. எனவே தான் அதன் அணு கட்டமைப்புகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ராணுவ தளங்கள் நொறுங்கி விழுந்தன.

இதையும் படிங்க: ஈரான் தாக்குதலால் அசிங்கப்பட்டு போன இஸ்ரேல்.. வியாபார புத்தியை காட்டிய அமெரிக்கா..!

முக்கியமான 9 அணு விஞ்ஞானிகள், பிரதான ராணுவ தளபதி உட்பட 9 தளபதிகளையும் இஸ்ரேல் துல்லியமாக குண்டு வீசி கொன்று இருக்கிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஈரானில் 300 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு இழப்பு இல்லை. ஈரானோடு ஒப்பிடும் போது இஸ்ரேல் முக்கியமான எந்த கட்டுமானங்களையும் இழக்கவில்லை. இதுவரை 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தனைக்கும் கொத்து கொத்தாக ட்ரோன்கள், 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி இருக்கிறது. இருப்பினும் பெரிய சேதம் இல்லை. காரணம், இஸ்ரேலின் வலிமையான வான் தடுப்பு கவசங்கள் தான்.

உலக அளவில் பெயர் போன அயன் டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ-2, ஆரோ-3 என நான்கு ஏவுகணை தடுப்பு கவசங்கள் இஸ்ரேலிடம் உள்ளன. பேட்ரியாட்ஸ், தாட் மற்றும் ஏவுகணை தடுப்பு போர் கப்பலையும் இஸ்ரேலுக்காக அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது. இவ்வளவு பெரிய வான் தடுப்பு கவசம் இஸ்ரேலுக்கு இருப்பதால் தான் ஈரான் அளவு பேரிழப்பை சந்திக்கவில்லை.

ஆனால் தற்போது ஈரான் வான் பாதுகாப்பு மையத்தையே உடைத்தெரியும் வகையிலான ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. நேற்று ஈரானின் புரட்சிகர ராணுவ படை, தங்களின் முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்தது. அதிசக்தி வாய்ந்த Fattah-1 ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது. 15 ஏவுகணைகள் மத்திய இஸ்ரேலை தாக்கின. அடுத்த 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் 5 ஏவுகணைகள் வந்தன. Fattah-1 ரக ஏவுகணையை வைத்து இஸ்ரேலை பந்தாடி விட்டோம். இஸ்ரேலால் அவற்றை இடைமறிக்க முடியவில்லை. இஸ்ரேலின் வான் பரப்பு எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று ஈரானின் புரட்சிகர ராணுவ படை  அறிவித்தது. 

இந்த நிலையில் இஸ்ரேலிய இராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்துவதில் அதன் நீண்ட தூர செஜ்ஜில் ஏவுகணையைப் பயன்படுத்துவதை தெஹ்ரான் உறுதிப்படுத்தியுள்ளது . ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ( IRGC ) இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களில் 2,000 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய நீண்ட தூர செஜ்ஜில் ஏவுகணைகளைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். 

செஜ்ஜில் என்பது ஈரானால் உருவாக்கப்பட்ட இரண்டு கட்டங்களைக் கொண்ட, திட எரிபொருள், தரையிலிருந்து தரைக்கு ஏவுகணை ஆகும். இதன் மதிப்பிடப்பட்ட தூரம் 2,000 கிலோமீட்டர் (1242 மைல்கள்) வரை இருக்கும், இது இஸ்ரேல் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகள் உட்பட எதிரி பிரதேசத்திற்குள் ஆழமாகத் தாக்கும். இந்த ஏவுகணை 18 மீட்டர் (59 அடி) நீளம் கொண்டது மற்றும் தோராயமாக 700 கிலோகிராம் (1,543 பவுண்டுகள்) எடையை சுமந்து செல்லும்.

இந்த செஜ்ஜில் ஏவுகணைகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு தடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதால் மக்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறுங்கள்.. இல்லையேல் பதுங்கு குழிகளில் மெல்ல சாக தயாராகுங்கள் என ஈரான் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேலை சின்னாபின்னமாக்க காமெனி கையில் எடுத்த ஆயுதம்..! ஹைபர் சோனிக் Fattah-1 என்னும் ஏவுகணை அரக்கன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share