×
 

தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!

காசா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலில் நிவாரண உதவி பெறுவதற்காக காத்திருந்த 8 பாலஸ்தீனியர்கள் உள்பட 75 பேர் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 1,139 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறியது. இந்த சம்பவத்திற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் இந்த போரில், காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  

250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.

இதையும் படிங்க: ரூ.5 பிஸ்கட் ரூ.2400க்கு விற்பனை.. காசாவில் போரால் ருத்ர தாண்டவம் ஆடும் வறுமை..!

இந்த முறை ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இறங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.

காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காசாவுக்கு மற்ற நாடுகள் அனுப்பும் உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதால் அங்கு பசி, பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது கிடைக்கும் உணவுப்பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுவரை 54,772 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1.25 லட்சம் பேர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து இருந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் முழு அளவில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், நிவாரண உதவி பெறுவதற்காக காத்திருந்த 8 பாலஸ்தீனியர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் ஒரே நாளில் 75 பேர் பலியாகி உள்ளனர். காசா நிவாரண உதவிக்கான அறக்கட்டளை, அதன் பணியை தொடங்கியதில் இருந்து, அதனை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்து உள்ளது.

இதையும் படிங்க: போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share