×
 

நாடு பத்தி எரியுறப்போ கல்யாணமா? மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு..!

ஈரான் உடனான சண்டையால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மகனுக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தை ஒத்தி வைத்தார்.

மேற்கு ஆசிய நாடுகளாக இருக்கும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல்கள் உள்ளன. காசாவின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேல் காசாவில் புகுந்து ஹமாஸ் படையினரை துவம்சம் செய்துகொண்டு இருக்கிறது.

ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக உள்ள ஈரான் கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல், இரண்டு தினங்களுக்கு முன் அந்நாட்டின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து திடீர் விமான தாக்குதல் நடத்தியது.200க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் நாடு முழுவதும் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம் முதல் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் வரை அனைத்தையும் இஸ்ரேல் படைகள் தாக்கி அழித்தன.  ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி மற்றும் அணுசக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முக்கிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர்.  இது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது,.

இதையும் படிங்க: ட்ரம்ப்தான் டார்கெட்.. ஈரானின் மாஸ்டர் ப்ளான்.. நெதன்யாகு பேச்சால் பற்றி எரியும் சர்ச்சை..!

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது உலகிற்கு ஆபத்து. இஸ்ரேலை அழிக்க ஈரான் அதனுடைய ஏவுகணை ஆயுதக் கிடங்களை அதிகரிக்க அவசரமுடன் செயல்படுகிறது. அந்த நாடு அடைய விரும்பும் அணுசக்தி வலிமையை எந்த நாடும் தாங்க முடியாது.  இதனால்தான் இஸ்ரேல் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதலை நடத்த வேண்டி இருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்  நெதன்யாகு தெரிவித்தார். தற்போது இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இரண்டாவது மகன் அவ்னெர் நெதன்யாகு, அமித் யார்தெனி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்ய இருந்தார். இதற்கான தேதி முன்னரே முடிவு செய்யப்பட்டிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் டெல் அவிவ் அருகே பரந்த அளவிலான பண்ணை வீட்டில் செய்யப்பட்டிருந்தன. திருமணத்தை பெரிய கொண்டாட்டமாக நடத்த இருந்தனர். பண்ணை வீட்டை சுற்றிலும் இருந்த சாலைகள், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. வான் பரப்பில் போலீஸ் ஹெலிகாப்டரை தவிர மற்ற விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டன.

இந்நிலையில், ஈரான் உடன் சண்டை துவங்கியுள்ளதால், திருமணத்தை நடத்துவது சர்ச்சையாகும் என கருதி, ஒத்தி வைத்துள்ளனர். மற்றொரு தேதியில் எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share