நேபாளத்தில் இருந்து அடித்து வரப்பட்ட 5 உடல்கள்! கண்டக் ஆற்றில் கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி! இந்திய எல்லையில் சோகக் காட்சி!
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் வழியாக செல்லும் கண்டக் நதியில் 5 உடல்கள் அடித்து வரப்பட்டுள்ளன. இதில் 2 பெண்கள் மற்றும் 3 ஆண்களின் உடல்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் தாக்கம் அண்டை மாநிலங்களிலும் தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தின் கண்டக் நதியில் நேபாளத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நேபாள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் கனமழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, நேபாளம் மற்றும் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வால்மீகி நகரில் உள்ள கண்டக் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், கண்டக் நதியின் நீர்மட்டம் மற்றும் கரையோரப் பகுதிகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? அறிக்கை கொடுங்க! மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!
இதன் காரணமாக ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் வழியாக செல்லும் கண்டக் நதியில் 5 உடல்கள் அடித்து வரப்பட்டுள்ளன. இதில் 2 பெண்கள் மற்றும் 3 ஆண்களின் உடல்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்புப் பணியாளர்கள் உடல்களை மீட்டு, உரிய பாதுகாப்புடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட 5 உடல்களும் சோனவுலி எல்லைப் பகுதியில் நேபாள போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அவை நேபாளத்தின் புத்வால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடையாளம் காணும் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னர் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தின் தாக்கம் எல்லையை கடந்து இந்தியப் பகுதிகளிலும் உணரப்பட்டு வரும் நிலையில், கண்டக் நதியில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கும் சூழலில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்த்த அமெரிக்க மீட்புக்குழு! மண்ணுக்குள் சிக்கிய 600 பேர் கதி என்ன? தீவிரமடையும் மீட்புப் பணி!