இதுலாம் ஒரு பிரச்னையா? அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! ட்ரம்ப் அசால்ட் பதில்!
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது விற்பனை ஆகி வருகிறது.
புதுடில்லி, மார்ச் 9: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடம் பாதிக்கப்பட்டதால் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வெள்ளிக்கிழமை 92.69 டாலராக இருந்தது இன்று 100 டாலரை கடந்து, சில நேரங்களில் 110 டாலருக்கு மேல் வர்த்தகமாகியது. 2022 ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
நிபுணர்கள் கூறுகையில், போர் தொடர்ந்தால் விலை 150 டாலரை தாண்டலாம் என்று எச்சரிக்கின்றனர். உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்கிறது. ஈரான் பதில் தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் பங்குச் சந்தைகள் சரிந்து வருகின்றன. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: எங்கள அச்சுறுத்தினா தேடி வந்து கொல்வோம்!! வேட்டையாடுவோம்! அமெரிக்க அமைச்சர் வார்னிங்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விலை உயர்வை கவலைப்பட வேண்டியதில்லை என்று நிராகரித்துள்ளார். தனது சமூக வலைதள பதிவில், “ஈரான் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததும் எண்ணெய் விலை விரைவாக குறையும்.
குறுகிய கால எண்ணெய் விலை உயர்வு அமெரிக்காவுக்கும் உலகத்துக்கும் பாதுகாப்பு, அமைதிக்கு செலுத்தும் மிக சிறிய விலைதான். இதை வித்தியாசமாக சிந்திப்பவர்கள் முட்டாள்கள் மட்டுமே” என்று கூறியுள்ளார்.
டிரம்ப் இந்த போரை ஈரானின் அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக காட்டுகிறார். ஆனால் விலை உயர்வு உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. G7 நாடுகள் அவசர கூட்டம் நடத்தி எண்ணெய் விலை கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க உள்ளன. சில நாடுகள் தங்கள் உத்தரவு எண்ணெய் இருப்புகளை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போர் தொடர்ந்தால் உலகளாவிய பணவீக்கம், பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியா உள்ளிட்ட இறக்குமதி சார்ந்த நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கும். எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி பொதுமக்களை பாதிக்கும். டிரம்பின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுக்கு வரும் வரை எண்ணெய் சந்தை பதற்றத்தில் இருக்கும்.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியை இழுத்து பூட்டிய ஈரான்!! முடங்கியது போக்குவரத்து! 700 எண்ணெய் கப்பல்கள் நிறுத்தம்!