×
 

எங்கள அச்சுறுத்தினா தேடி வந்து கொல்வோம்!! வேட்டையாடுவோம்! அமெரிக்க அமைச்சர் வார்னிங்!

பூமியில் எந்த பகுதியில் உள்ள அமெரிக்கர்களையாவது அச்சுறுத்தினால், மன்னிப்போ தயக்கமோ இன்றி உங்களை நாங்கள் வேட்டையாடுவோம். உங்களை கொல்வோம் என அமெரிக்க அமைச்சர் பீட் ஹெக்சேத் தெரிவித்தார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், ஈரானுக்கு எதிரான போரில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். "பூமியில் எந்த பகுதியில் உள்ள அமெரிக்கர்களையாவது அச்சுறுத்தினால் அல்லது கொன்றால், மன்னிப்போ தயக்கமோ இன்றி உங்களை நாங்கள் வேட்டையாடுவோம். உங்களை கொல்வோம்" என்று அவர் தீவிரமாகக் கூறியுள்ளார். இது ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' எனும் இணைந்த வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து 4 நாட்களாக நடந்த தாக்குதல்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரான் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று டார்பிடோ மூலம் தாக்கியது. கப்பல் பல துண்டுகளாக உடைந்து, வெடித்து சிதறி, தீப்பற்றி எரிந்து மூழ்கியது. இந்த தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நீர்மூழ்கியால் எதிரிக் கப்பலை மூழ்கடித்த முதல் சம்பவமாகும்.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியை இழுத்து பூட்டிய ஈரான்!! முடங்கியது போக்குவரத்து! 700 எண்ணெய் கப்பல்கள் நிறுத்தம்!

ஹெக்சேத் இன்று பேசும்போது, "அமெரிக்க மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு டிரம்ப் நிர்வாகம் தீர்க்கமாக செயல்பட விரும்புகிறது. அதற்கு மேல் எதுவும் கூறத் தேவையில்லை" என்றார். மேலும், ஈரான் ஜனாதிபதி டிரம்பை கொலை செய்ய முயன்றதாக நெடுங்காலமாகத் தெரியும் என்றும், அந்த முயற்சியில் ஈடுபட்ட ஈரானிய அலகின் தலைவர் 'வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார்' என்றும் தெரிவித்தார். "ஈரான் டிரம்பை கொல்ல முயன்றது, ஆனால் டிரம்பே கடைசியாக சிரித்தார்" என்று அவர் கூறினார்.

இதற்கு முன் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை ஈரான் தலைமை நினைவுபடுத்தியதாகவும், அதற்கு பதிலாக கமேனியை கொன்றதாகவும் தெரிகிறது. ஹெக்சேத் மேலும் கூறியதாவது: "இது ஆட்சி மாற்றப் போர் அல்ல. ஆனால் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. உலகம் நன்மை அடைந்துள்ளது. போரை நாங்கள் தொடங்கவில்லை. டிரம்ப் அரசின் கீழ் அதை முடித்து வருகிறோம். அமெரிக்கர்களை கொன்றால் அல்லது அச்சுறுத்தினால், எந்த இடத்தில் இருந்தாலும் உங்களை வேட்டையாடி கொல்வோம்."

இந்த எச்சரிக்கை உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. 

இதையும் படிங்க: இன்னும் 10 நாள் போர் நடந்தா அவ்வளவு தான்!! ஆயுதப்பற்றாக்குறை வரும்!! எச்சரிக்கும் பென்டகன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share