×
 

செங்கடலில் சவுதி அதிரடி! 13 நாடுகளுடன் உருவான புதிய பாதுகாப்பு கூட்டணி! ஹௌதிகளுக்கு செக்?

14 வெளிநாடுகள் உடன் இணைந்து செங்கடல் பாதுகாப்புக்கான கூட்டணியை உருவாக்கியுள்ளதாக சௌதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

செங்கடல் மற்றும் அதனை ஒட்டிய முக்கிய கடல் வழித்தடங்களில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவுதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் 13 நாடுகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக சவுதி அரசின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. உலக வர்த்தகத்திற்கு முக்கியமான இந்த கடல்வழியில் நிலவும் பதற்றம் காரணமாக இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

உலகளாவிய கடல் வர்த்தகத்தில் செங்கடல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக செங்கடலின் நுழைவுப் பகுதியான பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக தினமும் எண்ணற்ற சரக்கு கப்பல்கள் பயணிக்கின்றன. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழித்தடங்கள் உலக வர்த்தகத்தின் முக்கிய உயிர்நாடியாக கருதப்படுகின்றன. இப்பகுதியில் ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு சிக்கலும் சர்வதேச பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியதாக உள்ளது.

யேமனில் செயல்படும் ஹௌதி அமைப்பு, ஈரானின் ஆதரவைப் பெறுவதாக கூறப்படும் நிலையில், செங்கடல் பகுதியில் செல்லும் சில கப்பல்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதப்படும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சவுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது! பாகிஸ்தான்-துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி எச்சரிக்கை!

இதனால் வளைகுடா நாடுகள் மற்றும் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் கடும் கவலையில் உள்ளன. கடல் போக்குவரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், சவுதி அரேபியா தலைமையில் புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி இந்த கூட்டணிக்கான முன்மொழிவு சவுதி அரசால் முன்வைக்கப்பட்டது.

தற்போது வெளியான தகவலின்படி, மொத்தம் 15 நாடுகள் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இதில் 13 நாடுகள் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்துள்ளன. பஹ்ரைன், வங்கதேசம், கொமொரோஸ், ஜிபூட்டி, எகிப்து, சோமாலியா, சூடான், துருக்கி மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசு உள்ளிட்ட நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், செங்கடல் பாதுகாப்புக்காக உருவாகியுள்ள இந்த புதிய கூட்டணி சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரகசிய இடத்தில் கமேனி-பெஷெஷ்கியான் சந்திப்பு? உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share