×
 

ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

அந்த கப்பல் முன்பு சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக அமெரிக்க நிதித்துறை விதித்த தடைகளின் கீழ் இருந்ததாக ட்ரம்ப் கூறினார்.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை நடத்திய நடவடிக்கை உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் (ஏப்ரல் 22) முடிவுக்கு வரும் சூழலில், பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா பங்கேற்கும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாலும், ஈரான் பங்கேற்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்த நிலையில், ஈரானிய கொடி பறக்கும் ‘டூஸ்கா’ (Touska) என்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை சிறைப்பிடித்துள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 900 அடி நீளமும், விமானம் தாங்கிக் கப்பலுக்கு நிகரான எடையும் கொண்ட இந்தக் கப்பல், அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறி செல்ல முயன்றதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

அமெரிக்க கடற்படையின் வழிகாட்டி ஏவுகணை அழிப்பான் கப்பல் (USS Spruance) முதலில் நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் ஈரானிய கப்பல் குழுவினர் அதை பின்பற்ற மறுத்ததால், அமெரிக்கக் கப்பல் அந்தக் கப்பலின் எஞ்சின் அறையில் துளை ஏற்படுத்தி நிறுத்தியது. 

தற்போது அந்தக் கப்பல் அமெரிக்க மரைன்ஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என டிரம்ப் தெரிவித்தார். மேலும், இந்தக் கப்பல் முன்பு சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக அமெரிக்க நிதித்துறை விதித்த தடைகளின் கீழ் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் தரப்போ இந்த நடவடிக்கையை “ஆயுதமேந்திய கொள்ளை” எனக் கண்டித்து, விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான், அமெரிக்கக் கப்பல்களின் முற்றுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த ஜலசந்தியின் மூடல், உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு, பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகித்து மீண்டும் அமைதிப் பேச்சை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் டூஸ்கா கப்பல் சம்பவம், ஏற்கனவே பலவீனமாக உள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. உலக நாடுகள் இந்தப் பதற்றத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

ஈரான்-அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய திருப்பம், பிராந்திய அமைதிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவு, சூழலை எப்படி மாற்றும் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எங்கள் மன உறுதியை ரொம்ப சோதிக்காதீங்க!! அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share