மக்களுக்கு பிடித்தாலும், பிடிக்க விட்டாலும்! இஸ்ரேல் தான் அமெரிக்காவின் ஆகச்சிறந்த கூட்டாளி - ட்ரம்ப் பெருமிதம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் ஆகச் சிறந்த கூட்டாளி என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த அழுத்தத்தால் அமெரிக்கா தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியது. ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா-ஈரான் இடையே இரு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இந்தச் சூழலில் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சி எடுத்து வருகிறது. பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் பேச்சு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலை தனது நாட்டின் ஆகச் சிறந்த கூட்டாளி எனப் பாராட்டியுள்ளார். தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “மக்கள் இஸ்ரேலை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அவர்கள் அமெரிக்காவின் GREAT Ally என்பதை நிரூபித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!
அவர்கள் துணிச்சலானவர்கள், தைரியமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், புத்திசாலிகள். மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் மற்றவர்கள் தங்கள் உண்மையான முகத்தை காட்டியபோது, இஸ்ரேல் கடுமையாக போராடி, எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
டிரம்ப்பின் இந்தப் பாராட்டு, ஈரான் உடனான போர் நிறுத்தம் உறுதியற்ற நிலையில் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-அமெரிக்க உறவு மிகவும் வலுவானது என்பதை மீண்டும் உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளது. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பதற்றம், கப்பல் சம்பவங்கள் உள்ளிட்டவை அமைதிப் பேச்சுக்கு சவாலாக உள்ளன.
உலக நாடுகள் இந்தப் பிராந்தியப் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் மோதல் ஏற்படுமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு அமைதி மீண்டும் சீர்குலையாமல் இருக்க வேண்டும் என உலக அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!