×
 

ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்... டிரம்ப் கடும் எச்சரிக்கை; நெதன்யாகுவும் அதிரடி!

ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் இன்னும் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய ராணுவ தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் இருமடங்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், இரு தரப்புக்கும் இடையிலான மோதல் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால், அமைதி முயற்சிகள் சிக்கலான நிலையை எட்டியுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தால் அடுத்த வாரமே அமெரிக்க ராணுவம் தனது நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தும் என்று தெரிவித்தார். குறிப்பாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இலக்காகக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: இவங்க 14 பேரை பழிவாங்கியே ஆகணும்! ட்ரம்புக்கு வச்சாச்சு குறி! ஈரான் வெளியிட்ட ஹிட் லிஸ்ட்!

மேலும், "ஈரான் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் இன்னும் பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும். நான் போதும் என்று கூறும் வரை அமெரிக்க ராணுவ நடவடிக்கை தொடரும்" என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் மிகவும் கடுமையான பதிலடி அளிக்கப்படும் என்றும், தங்களது பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

"எங்களைத் தாக்கினால் அமைதியாக இருப்போம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் இருமடங்கு வலிமையுடன் பதிலடி கொடுப்போம்" என்று நெதன்யாகு தெரிவித்தார்.

டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் இந்த கடுமையான எச்சரிக்கைகளால் மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச நாடுகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

 

இதையும் படிங்க: 1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share