×
 

காசா நிவாரணக் கப்பல் விவகாரம்: நெதன்யாகுவை கைது செய்ய துருக்கி உத்தரவு!

காசாவுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை கைப்பற்றிய விவகாரத்தில் நெதன்யாகுவுக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்து துருக்கி உத்தரவிட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சர்வதேச உதவிக் கப்பல்களை இஸ்ரேலிய ராணுவம் நடுக்கடலில் இடைமறித்துக் கைப்பற்றிய விவகாரம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச கைது வாரண்ட் (International Arrest Warrant) பிறப்பித்துத் துருக்கி நீதித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

துருக்கி நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மனிதாபிமான அடிப்படையில் காசா மக்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு உத்தரவிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக இந்த சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.  

இதையும் படிங்க: சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!


ஏற்கனவே காசா மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், தற்போது துருக்கி நாடும் நிவாரணக் கப்பல் விவகாரத்தில் சர்வதேச வாரண்ட்டை முடுக்கிவிட்டுள்ளது. துருக்கியின் இந்த அதிரடி நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் சர்வதேச அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இஸ்ரேல் மற்றும் துருக்கி இடையேயான தூதரக உறவில் மேலும் விரிசலை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிங்க: டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! காஸாவில் போர் நிறுத்தம் எப்போது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share