ஈரானுக்கு பயம்காட்டும் அமெரிக்கா! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் குவிப்பு!! ட்ர்ம்ப் அட்ராசிட்டி!
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தையை துவங்கிய நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் திடீரென 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்த அமெரிக்காவின் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவாவில் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா திடீரென மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ பலத்தை வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட எப்-22 ராப்டர், எப்-35 லைட்னிங் II, எப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதோடு, விமான எரிபொருள் நிரப்பும் டாங்கர் விமானங்களும் தீவிர ரோந்து செய்து வருகின்றன.
இதற்கு மேலாக, உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். போர்டு (USS Gerald R. Ford) கரீபியன் பகுதியிலிருந்து மத்திய அட்லாண்டிக் வழியாக மத்திய கிழக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தை வெற்றி பெறலைனா அவ்ளோதான்! மோசமான நாளா மாறும்!! ஈரானுக்கு ட்ரம்ப் வெளிப்படையான மிரட்டல்!
இதனுடன் யுஎஸ்எஸ் மஹான், யுஎஸ்எஸ் பெயின்பிரிட்ஜ், யுஎஸ்எஸ் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய ஏவுகணை அழிப்பு கப்பல்களும் இணைந்துள்ளன. ஏற்கனவே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட பல அமெரிக்க கடற்படை மற்றும் வான் படைகள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைப்பதற்காக பல ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் எதிர்த்த ஈரான், தற்போது பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இரு தரப்பும் ஜெனிவாவில் நேரடி அல்லது மறைமுக பேச்சுகளை நடத்தி வருகின்றன. சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றம் இருப்பதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. ஆனால், ஒப்பந்தம் இன்னும் உறுதியாகவில்லை.
இந்த சூழலில், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடக்க, மறுபுறம் அமெரிக்கா ராணுவத்தை பெருமளவு குவிப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அழுத்த உத்தியா அல்லது போர் அபாயத்திற்கான தயாரிப்பா என்பது கேள்வியாக உள்ளது.
ஈரான் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா அல்லது புதிய போர் சூழல் உருவாகுமா என உலகம் உற்று நோக்கி வருகிறது.
இதையும் படிங்க: ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் சந்தேகம்!! குட்டையை குழப்பும் ட்ரம்ப்!! குழம்பி நிற்கும் இஸ்ரேல்!