நேபாள மக்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா.. ட்ரம்ப் உத்தரவால் கதிகலங்கி நிற்கும் குடும்பங்கள்..!
நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தங்கி உள்ள நேபாளத்தை சேர்ந்த 12,700 மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற போது, சட்டவிரோத குடியேற்றத்தை சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சில தினங்களுக்கு முன்பு மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிவர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறிவர்களை அடையாளம் கண்டு தினமும் 3,000 பேரை கைது செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து டொனால்ட் டிரம்ப் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: நல்லதுக்கு இல்லை.. சுத்த பைத்தியக்காரத்தனம்! எலான் மஸ்கை எச்சரிக்கும் அமெரிக்க துணை அதிபர்..
இந்த நிலையில் நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டிபிஎஸ்) என்பது, போா் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடிகளை எதிா்கொள்ளும் சில நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஒரு சிறப்பு அனுமதியாகும். வீடு திரும்புவது அவா்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதன் அடிப்படையில், அவா்கள் அமெரிக்காவில் சட்டபூா்வமாக 18 மாதங்கள் தங்கி வேலை செய்ய இந்த டிபிஎஸ் அனுமதிக்கிறது.
2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு இந்த சிறப்பு அனுமதியை அமெரிக்க அரசு வழங்கி இருந்தது. நேபாளத்துக்கு வழங்கப்பட்ட இந்த அந்தஸ்தை கடந்த 2016-ஆம் ஆண்டு கூடுதலாக 18 மாத காலத்திற்கும், அதன் பிறகு பல முறையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டிஎச்எஸ்) நீட்டித்து.
இந்நிலையில், டிஎச்எஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘நேபாளத்தின் நிலைமை தற்போது சீராக உள்ளது. எனவே, அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட டிபிஎஸ் அந்தஸ்தை 2025, ஜூன் 24-ஆம் தேதியுடன் ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
டிபிஎஸ் விதிகளின் கீழ், அமெரிக்காவில் உள்ள நேபாள மக்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப கெடு விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. டிபிஎஸ் அனுமதியின் கீழ் அமெரிக்காவில் சுமாா் 12,700 நேபாள மக்கள் வசித்து வருகின்றனா். இதில் 5,500க்கும் மேற்பட்டோா் அமெரிக்க நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளனா்.
இதையும் படிங்க: விளைவுகள் கடுமையாக இருக்கும்..! தனிக்கட்சி துவங்கும் எலான் மஸ்கை எச்சரிக்கும் ட்ரம்ப்..!