அடுத்த விக்கெட்..? மனதை வெல்ல முடியாத தலைமை... தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தும் சி. விஜயபாஸ்கர்..!
அதிமுக தலைமையில் இரண்டாவது நாளாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் தொடர்ந்து நிலவும் உள்கட்சி முரண்பாடுகளுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மற்றும் செயல்பாட்டை நேரடியாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது கட்சிக்குள் புதிய விவாதங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உணர்வை மதிக்காத இடத்தில் உண்மை பயணம் சாத்தியமா? என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கேட்டுள்ளார். தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல. தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்கள் மனதை எப்படி வெல்லும் என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக தலைமையை விமர்சித்து 2வது நாளாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வார்த்தைகள் தெளிவாக எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை குறிவைத்து எழுதப்பட்டவை என அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.
இதையும் படிங்க: WHY SILENT CM..? ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி... கொந்தளித்த உதயநிதி..!!
இந்தப் பதிவின் பின்னணியில் அதிமுகவின் சமீபத்திய நிகழ்வுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசுக்கு சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சில அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் விவகாரம் பெரும் பூசலுக்கு வழிவகுத்தது. இதைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. பின்னர் தகுதி நீக்க மனுக்கள் வாபஸ் பெறப்பட்டாலும், உள்கட்சி அதிருப்தி தொடர்கிறது.
பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து உரையாடிய நிலையில், விஜயபாஸ்கர் மட்டும் இதுவரை அவரை நேரில் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனது தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து வரும் அவர், கட்சியில் தொடர்வது குறித்த இறுதி முடிவை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: “இன்னும் 3 மாசம் தான்...” - தவெக ஆட்சிக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கப்போகும் திமுக... முன்னாள் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்...!