சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். நடப்பு சீசனில் சிஎஸ்கே-வின் டாப்-ஆர்டர் பேட்டிங்கில் தூணாக விளங்கிய இவரது விலகல், அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது அந்தப் போட்டியில் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த மாத்ரே, ஐந்தாவது ஓவரின் போது இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது இடது தொடைப் பகுதியில் (Hamstring) தசைநார் கிழிந்தது. வலியால் துடித்த அவர், ஓட முடியாமல் திணறியும் தொடர்ந்து விளையாட முயன்றார். ஆனால், அடுத்த இரண்டு பந்துகளிலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நேற்று (ஏப்ரல் 20) அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், தசைநார் கிழிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தக் காயத்திலிருந்து அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தது 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீசனில் 18 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே-விற்காக ஒரு 'சர்ப்ரைஸ்' பேக்கேஜாக இருந்தார். இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 201 ரன்கள் குவித்து, அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சுமார் 178 ஆக இருந்தது. இரண்டு அரைசதங்களையும் விளாசியுள்ளார்.
இதையும் படிங்க: வெற்றியுடன் தொடங்குமா சிஎஸ்கே? இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!
ஆயுஷ் மாத்ரே மட்டுமல்லாமல், சிஎஸ்கே அணி ஏற்கனவே பல முக்கிய வீரர்களின் காயங்களால் அவதிப்பட்டு வருகிறது. கணுக்கால் தசைப் பகுதியில் (Calf strain) ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். கலீல் அகமது & நேதன் எல்லிஸ் இவர்களும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக இன்னும் அதிகாரப்பூர்வ மாற்று வீரரை (Replacement) சிஎஸ்கே அறிவிக்கவில்லை. இருப்பினும், உர்வில் படேல், தீபக் ஹூடா அல்லது இளம் வீரர் ஸ்வஸ்திக் சிகாரா ஆகியோரில் ஒருவர் அணிக்குள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உள்ளூர் திறமைகளை சிஎஸ்கே கண்டுகொள்வதில்லை! முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி ஆதங்கம்!