ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம், சென்னையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில், இன்று (ஏப்ரல் 10) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகரன், குணசேகரன் மற்றும் முருகையன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள், ஜாக்டோ-ஜியோ தனது நியாயமான 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கை அளித்ததோடு, தேர்தல் வாக்குறுதியிலும் உறுதிப்படுத்தினார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் வரியால் பீதி..! 600 டன் ‘ஐ-போனை’ இந்தியாவிலிருந்து அமெரிக்கா கொண்டு செல்லும் ‘ஆப்பிள்’ நிறுவனம்..!

இதனையடுத்து நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியாகின. அதனைத் தாெடர்ந்து கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.

இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைப் பேரணி நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மே 24 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை கோரிக்கை மாநாட்டில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: போக்சோவில் சிக்கிய போதகர்.. ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு.. விரைவில் விசாரணை..!