கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட காலமாகவே உணர்ச்சிமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, 1974-ம் ஆண்டு இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும், தீவை மீட்கவும் வேண்டுமென அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் மேடைகளில் மட்டுமல்லாமல், இந்திய நாடாளுமன்றத்திலும், பொதுத் தேர்தல் காலங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிற கட்சிகள், கச்சத்தீவை மீட்பது மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய விவகாரத்தை சுட்டி காட்டி பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கச்சத்தீவு விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை அதிபர் திட்டவட்டமாக பேசி உள்ளார். கச்சத்தீவு பற்றிய கருத்தாடல் நடைபெற்று வருகிறது. அது எங்களுடைய பூமி. பின் நாட்களில் கச்ச தீவுக்கு செல்ல விரும்புவதாக இலங்கை அதிபர் அனுரகுமார திசய நாயக்க தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு நிதியில் பயணம்.. எழுந்த பரபரப்பு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது..!!
இந்த நிலம், நீர், ஆகாயம் ஆகியவை எங்கள் மக்களுக்கு சொந்தமானது என்று கூறினார். எந்த நாளிலும் அதிகாரமாக, அடிமையாக விடமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை., அதை நாங்கள் செய்து வருகிறோம் என கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் அராஜகம்.. ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை..!!