கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலாஷ்டமி விழாக்கள் 2026ஆம் ஆண்டில் அபூர்வமாக ஒரே நாளில் இணைந்து வருகின்றன. நாளை செப்டம்பர் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை இவ்விரு விழாக்களும் கொண்டாடப்படும் என ஆன்மீக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆதம் ஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி வழங்கிய விளக்கத்தின்படி, அஷ்டமி திதி நாளை அதிகாலை 2.09 மணிக்குத் தொடங்கி இரவு 11.46 மணி வரை நீடிக்கிறது.
அதேபோல் ரோகிணி நட்சத்திரம் அதிகாலை 12.57 மணிக்குத் தொடங்கி இரவு 11.22 மணி வரை உள்ளது. அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் இணைவதால் இது கிருஷ்ண ஜெயந்திக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக இந்த இரண்டு விழாக்களும் தனித்தனியாக வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அவை ஒரே நாளில் வருவது சிறப்பு நிகழ்வாகும்.

பூஜை மற்றும் வழிபாட்டிற்கு காலை 9.15 மணி முதல் 10.20 மணி வரை, மதியம் 12.15 மணி முதல் 1.30 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகிய நேரங்கள் சிறப்பானவை என அவர் குறிப்பிட்டார். கிருஷ்ணருக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் ஆகிய பஞ்சகவ்ய பொருட்களைப் படைத்து வழிபடலாம். எளிமையை விரும்பும் கிருஷ்ணருக்கு அவல் கொண்டு தயாரிக்கப்படும் பாயாசம் அல்லது அவல், சர்க்கரை, தேங்காய் கலவை ஆகியவையும் மிகவும் பிரியமானவை.
இதையும் படிங்க: கற்பு பறிப்போவது ஆணுக்கு தான்.! EPS பேச்சுக்கு சிபிஎம் எம்எல்ஏ லதா பதிலடி..!! MLA தாரகை வரவேற்பு.!
வீட்டின் நுழைவாயிலில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை வரைந்து “கோவிந்தா, கோபாலா, மாதவா” என உச்சரித்து வரவேற்பு அளிக்கலாம். இது குடும்பத்திற்கு நல்லாசிகளைத் தரும் என்பது நம்பிக்கை. மேலும் பெண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செய்யலாம். இத்தகைய எளிய ஆனால் பக்தி நிறைந்த முறைகளால் வீட்டில் ஆனந்தமும் ஆன்மீக அமைதியும் பெருகும் என ஆன்மீக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: முதுமலை காப்பகத்தில் இனி செல்போனுக்கு தடை.. வனத்துறை அதிரடி நடவடிக்கை..!!