உலக புகழ் பெற்ற மதுரை சித்திர திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்துள்ளது. போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தால் மதுரை சித்திர திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்ற அச்சம் நிலவி வந்தது.
மே ஒன்றாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு மதுரை சித்திர திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என பொதுப்பணித்துறையினர் தீவிர ஆலோசனை ஈடுபட்டு வந்தனர்.
அணையிலிருந்து ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டால் வறண்டு போன நிலம் காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து பொதுப்பணித்துறையினர் மாற்று ஏற்பாடுகளை ஆராய்ந்து வந்தனர். அதனையடுத்து வைகைய அணையிலிருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. மொத்தமாக 170 மில்லியன் கணடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரையில் தண்ணீர் திறக்க முடிவு செய்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட விவகாரம்..! போலி ஏஜெண்டுகள் கைது..!
வைகை இணையிலிருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இது தவிர மதுரை கொண்டமாரி ஓடை வழியாக மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளன.
மதுரை சித்திரை திருவிழாவை போலவே சோழவந்தான் பகுதியிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறும் அந்த நிகழ்விற்கும் தண்ணீர் வழங்கும் வகையில், ராமராஜபுரம் பகுதியில் இருந்து சோழவந்தான் பகுதிக்கு தண்ணீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சரிந்த நிலையில் காணப்படும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையில் நீர்மற்றம் நான்கு முதல் 5 அடி வரை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மொஜ்தபா கமெனிக்கு என்ன ஆச்சு - ஈரான் உச்ச தலைவர் குறித்து வெளியானது பகீர் தகவல்...!