விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் நோய் பாதிப்பு, மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலாத நிலைமை காரணமாக ஓடும் ரயில் முன் பாய்ந்து தாய், இரு மகள்கள் என 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் துண்டு துண்டாக சிதறி கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய், இரு மகள்கள் என்பது தெரிந்தது.
விருதுநகர் பட்டம்புதுார் காலனியை சேர்ந்த ராஜவள்ளி 60, இவருக்கு உப்புச்சத்து அதிகரித்து சிறுநீரக குறைபாடு இருந்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள், முத்துப்பேச்சி, முத்துமாரி என மூன்று மகள்கள் உள்ளனர்.மாரியம்மாள் (30), முத்துப்பேச்சி (25) இருவரும் மாற்றுத்திறனாளிகள்
இதில் முத்துமாரிக்கு திருமணம் முடிந்து விட்டது.
இதையும் படிங்க: தவெக மாநாடு போகப் போறீங்களா..? இதற்கெல்லாம் அதிரடி தடை.. கட்டுப்பாடுகளை முழுசா தெரிஞ்சிக்கோங்க...!
மாற்றுத் திறனாளிகளாக இருந்த 2 மகள்களையும் வறுமை காரணமாக திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்தனர். மன உளைச்சல் காரணமாக புதன் கிழமை மாலை திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
போலீசார் சிதறிக்கிடந்த உடலின் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டானதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
ராஜ வள்ளி கையில் பெயரை பச்சை குத்தி இருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
இதையும் படிங்க: 100 அடி கொடி கம்பம் திடீரென விழுந்தது எப்படி? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை....!