தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகம் நோக்கிய இணைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். நான்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய செயலாளர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் அதிமுகவின் 15 நகரச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர் என ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. இணைப்பு விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரையாற்றினார். அதிமுக தள்ளாடுகிறது என தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதங்கம் தெரிவித்தார். நாங்கள் உருவாக்கிய பொதுச்செயலாளரின் தவறான முடிவால், அதிமுக தள்ளாடுகிறது என்றும் உண்மையை சொன்னால், துரோகி என்கிறார்கள், என தெரிவித்துள்ளார். இனி விஜய் ஆட்சி தான் என்றும் நிரந்தர முதலமைச்சர் விஜய் தான் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இல்லை, இந்தியாவில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் எம்ஜிஆர் போல இனி தமிழகத்தில் விஜய் ஆட்சி தான் தொடரும், என பேசினார்.
இதையும் படிங்க: இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்