2013-இல் ஐபிஎல்-இல் நடந்த சூதாட்டம் மற்றும் ஸ்பாட்-பிக்சிங் ஊழல் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது சில தொலைக்காட்சி சேனல்களும், ஊடகவியலாளர்களும், ஒரு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் தோனியின் பெயரை இந்த ஊழலோடு தொடர்புபடுத்தி விவாதங்கள் நடத்தினர். அவர்கள் தோனி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தனது பெயருக்கும் புகழுக்கும் பெரும் களங்கம் ஏற்பட்டதாகக் கருதிய தோனி சுதீர் சௌத்ரி உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத் குமார் ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக நீடித்து வந்தது.

பல முறை தாமதங்கள், மறுஆய்வு மனுக்கள், மேல்முறையீடுகள் என பல சட்டரீதியான தடைகள் இருந்தன. குறிப்பாக, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அதை நிராகரித்து, வழக்கு விசாரணைக்கு செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.2025 ஆகஸ்ட் மாதத்தில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தலைமையிலான அமர்வு, வழக்கில் விசாரணை தொடங்க உத்தரவிட்டது
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை? எங்களுக்கு எந்த சம்மதமும் இல்ல... போலீசை கைகாட்டிய கிரிக்கெட் வாரியம்..!
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் தோனி 10 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடி- யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணத்தை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை மார்ச் பன்னிரண்டாம் தேதிக்குள் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விசிலுக்கு தடை… சத்தம் தூக்கம் கலைக்குதோ? ஜுரம் வந்துடுச்சு போல… TVK விமர்சனம்..!