தமிழ்நாட்டின் உணவு கொள்கலனாக அறியப்படும் காவிரி டெல்டா பகுதி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் ஆழமான சோகத்தை சந்தித்துள்ளது. அக்டோபர் 16-ஆம் தேதி இயல்பை விட நான்கு நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய இந்த மழைப்பொழிவு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புயல் வேகத்தில் பெய்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் தண்ணீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதுடன் விவசாய நிலங்கள் சேதம் மற்றும் போக்குவரத்து குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள திமுக அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார். விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000-ற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கமுக்கமா கல்லா கட்டிடீங்களே! சாராய விற்பனை தான் நல்லாட்சி லட்சணமா? சாடிய நயினார்...!
எனவே, நானும் டெல்டாக்காரன் தான் என விளம்பர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி... மனித பேரிடர் இது! நயினார் கண்டனம்...!