உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா என்று முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். பத்ம விருதாலர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன.
விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள் என்று கூறினார்.

அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!
நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான “ஆனைமங்கல செப்பேடுகள்” நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை என்றும் கூறினார். மேலும், நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை என்றும் உங்களைத் தோள் வலிக்க தாங்கிப்பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா என்றும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு கேள்வி எழுப்பினார். இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை டூ டெல்லி..! பரபரக்கும் அரசியல்.. முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!