×
 

டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாள்! மோடி தலைமையில் இன்று நடக்கப்போகும் முக்கிய ஆலோசனை என்ன?

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாள் அமர்வுகளில் உலகளாவிய பொருளாதார நிலை, வர்த்தக வளர்ச்சி மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.

புதுடெல்லி: இந்தியா தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இன்று தொடங்கின. பாரத் மண்டபத்தில் நடைபெறும் முக்கிய அமர்வுகளில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று, எதிர்கால வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்திற்கு வந்தடைந்தார். அவரைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் தொடங்கின.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாள் அமர்வுகளில் உலகளாவிய பொருளாதார நிலை, வர்த்தக வளர்ச்சி மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.

இதையும் படிங்க: அடுத்த 20 ஆண்டுகளுக்கான ‘மாஸ்டர் பிளான்’! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு! இனி வேற லெவல்!

இந்நிலையில், இறுதி நாளான இன்று இந்தியாவின் தலைமையில் “தாங்குதிறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை” என்ற RICS கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆலோசனைகள் நடைபெறுகின்றன. மாறிவரும் உலகச் சூழலில் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவது, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்துக்கு மத்தியில், இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் இடம்பெறுகின்றன.

மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளார். இந்த சந்திப்புகளில் இந்தியா மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் வெளியாகும் கருத்துகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐரோப்பாவுடன் மோதலா? உலக நாடுகளுக்கு புடின் சொன்ன முக்கிய செய்தி! ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share