×
 

#BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

2027 மார்ச் ஒன்றாம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது தனிநபர்களின் சாதி அடையாளங்களை முறைப்படுத்தி பதிவு செய்யும் ஒரு செயல்முறை. இது மக்களின் சமூக, பொருளாதார நிலைகளை அறியவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய நலத்திட்டங்களை வகுக்கவும் உதவுகிறது.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. லடாக் ஜம்மு காஷ்மீர் இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்தின் கோரத் தாண்டவம்.. முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயிரிழந்த சோகம்!!

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாதிமாற் கணக்கெடுப்பு தொடங்கும் என்று அரசிதழில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது பணி சூழ்ந்த மலைப்பிரதேசம் தவிர்த்த மாநிலங்களில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: நயினார் VS அண்ணாமலை.. தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு ஏன்? குழம்பும் தொண்டர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share