என் கனவை சொல்லட்டா? "எனக்கு நயன்தாரா வேணும்"... சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!!
உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்து சி. வி. சண்முகம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட "உங்க கனவை சொல்லுங்க" திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அணுகி, அவர்களின் தனிப்பட்ட கனவுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், தேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகளை சேகரிக்கும் ஒரு பெரிய அளவிலான மக்கள் தொடர்பு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று சிறப்பு படிவங்களை நிரப்பி, மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான "கனவு அட்டை" வழங்கப்பட்டு, அதன் மூலம் கோரிக்கைகளின் நிலையை இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் மக்களின் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடும் என முதலமைச்சர் உறுதியளித்தார். இத்திட்டம் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, அரசு திட்டங்களை மக்கள் நலன் சார்ந்து வடிவமைப்பதற்கான ஒரு புதுமையான அணுகுமுறை என்று ஆதரவாளர்களால் பாராட்டப்பட்டாலும், பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!
இதனிடையே, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உங்க கனவை சொல்லுங்க என்ற முதலமைச்சர் திட்டத்தை விமர்சித்து பேசினார். என் கனவை சொன்னால் நிறைவேற்றியே தருவாரா என்ற கேட்ட அவர், எனக்கு நயன்தாரா வேண்டும் நிறைவேற்றி தர முடியுமா என்று நக்கலாக பேசி இருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!