×
 

இந்திய கடற்படையில் இணையும் மற்றொரு அசூரன்.! இந்திரனின் வாளை குறிக்கும் ரஷ்யா ஆயுதம்!

இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐ.என்.எஸ்., தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும்.

இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு ஐ.என்.எஸ். துஷில் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போர்க்கப்பலை வரும் 28-ம் தேதி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது.

புதிய போர்க்கப்பலுக்கு ஐ.என்.எஸ். தமால் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த போர்க்கப்பல் உடனடியாக இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் புதிய போர்க்கப்பலின் வருகை இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே இவருதான்! மோடியை புகழ்ந்து தள்ளும் சசிதரூர்.. கடுப்பில் ராகுல்காந்தி..!

இந்த நிலையில்  இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பலான ஐஎன்எஸ் தமால்(INS Tamal), ஜூலை 1ல் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது.  கடவுள்களின் ராஜாவான இந்திரனால் போருக்குப் பயன்படுத்தப்பட்ட புராண வாளைக் குறிக்கும் வகையில் இந்த போர் கப்பலுக்கு தமால் என பெயரிடப்பட்டுள்ளது. 125 மீட்டர் நீளம், 3,900 டன் எடையில் உருவாகி உள்ள இந்த போர் கப்பல், ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராட்டில் இருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. 

கடல், நிலம் இரண்டிலும் இலக்கை குறிவைக்கும் ‘பிரமோஸ்’ நீண்ட தூர ஏவுகணை உள்பட இந்த கப்பலில் 26 சதவீத தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியாவில் மேம்படுத்தப்பட்டவை. அதாவது இந்தியா, ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்களின் கலவையை கொண்ட இந்த போர்க்கப்பல் மேற்கு கடற்படை பிரிவில் போர்வாளாக திகழும் என்று இந்திய கடற்படை செய்தி தொடா்பாளா் கமாண்டா் விவேக் மத்வால் தெரிவித்தாா். 

ஐஎன்எஸ் தமால் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறன்களின் அடையாளமாக மட்டும் இல்லாமல், இந்தியா-ரஷ்யா கூட்டாண்மையின் வலிமையை எடுத்துக்காட்டும். கடந்த 20 ஆண்டுகளில் ரஷியாவில் இருந்து இந்திய கடற்படையில் இணையும் 8வது ‘க்ரிவாக் வகை’ போா்க்கப்பல் இது. இந்தியா-ரஷியா ஒத்துழைப்பில் இரு நாடுகளிலும் தலா 2 போா் கப்பல்கள் தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டன. 

ரஷியாவில் இருந்து இப்போது 2வது கப்பலின் தயாரிப்பு முடிந்து, கடற்படையில் சோ்க்கப்பட உள்ளது. தொடக்க நிகழ்வில் மேற்கு கடற்படை பிரிவின் தளபதி சஞ்சய் ஜே.சிங் தலைமையில் பல இந்திய மற்றும் ரஷிய உயர் பாதுகாப்பு அதிகாரிகள்  பங்கேற்கின்றனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்படும் கடைசி போர் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share