×
 

ககன்யான் விண்கலத்தின் முதற்கட்ட சோதனை இந்த ஆண்டின் இறுதியில் தொடக்கம்! இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியாவின் ரூ.20,193 கோடி மதிப்பிலான ககன்யான் விண்வெளித் திட்டத்தின் முதற்கட்ட ஆளில்லா சோதனை இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட விண்கலப் பரிசோதனை இந்த ஆண்டின் இறுதியில் விண்ணில் ஏவப்பட்டுத் தொடங்கப்படும் என்றும், முதல் மூன்று முறை மனிதர்கள் இல்லாமலும், அதன்பின்னர் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பியும் சோதனைகள் நடத்தப்படும் என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.  

சுமார் 20,193 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள தாழ் வட்டப்பாதைக்கு (Low Earth Orbit) விண்வெளி வீரர்களை அனுப்பி, விண்வெளியில் பல நாட்கள் தங்க வைத்துப் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், ஆரம்பக் கட்டமாக முதல் மூன்று முறை மனிதர்கள் இல்லாத தானியங்கி ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பித் தீவிரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மூன்று சோதனைகளும் முழுமையான வெற்றியை ஈட்டிய பின்னர், இறுதிக்கட்டமாக இந்திய விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் பயணிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மனித விண்வெளிப் பயணம் அரங்கேறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: விண்வெளி வீரர்களுக்கு இந்தியாவிலேயே பயிற்சி! ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.26 கோடியில் உருவாகும் ‘ககன்யாத்ரி நிவாஸ்’

இத்திட்டம் முழுமையாக வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில், சோவியத் ஒன்றியம் (ரஷ்யா), அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, சொந்தத் தொழில்நுட்பத்தில் மனிதர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய உலகின் நான்காவது வல்லரசு நாடு என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா தனதாக்கும்.  

இதையும் படிங்க: 2035ல் விண்ணில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்! இஸ்ரோ தலைவர் சொன்ன மாஸ் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share