இனி இந்தியா வச்சதுதான் சட்டம்! பதறும் பாக்.,!! 31 ஆயிரம் கோடியில் உருவாகும் பிரம்மாண்ட அணை!!
செனாப் நதியை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான் நகரங்கள் பொருளாதார ரீதியாக அடிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக குற்றம் சாட்டிய மத்திய அரசு, சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) நிறுத்திவைத்தது. இதனால் இந்தியா தனது நீர் உரிமையை முழுமையாக பயன்படுத்த முடிவு செய்தது.
இதன் ஒரு பகுதியாக, செனாப் நதியில் ராம்பன் மாவட்டத்தில் உள்ள சாவல்கோட் (Sawalkot) நீர்மின் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் தூசுதட்டி எடுத்துள்ளது. இத்திட்டம் ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் அரசால் முன்னெடுக்கப்பட்டது. தற்போது தேசிய நீர்மின் கழகம் (NHPC) இதை 9 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை! ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்! ஐ.,நா-வில் வெளுத்து வாங்கிய இந்தியா!
திட்டத்தின் மொத்த செலவு 31,380 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். முதல் கட்ட பணிகள் 5,129 கோடி ரூபாய் செலவில் தொடங்க உள்ளன.
கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. மார்ச் 24-ஆம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவு தண்ணீர் செல்கிறது. சாவல்கோட் திட்டம் முடியும்போது இந்தியாவுக்கு கூடுதல் நீர் மின்சக்தியும், தண்ணீரும் கிடைக்கும். பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் அளவு குறையும். செனாப் நதியை ஒட்டிய பாகிஸ்தான் நகரங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்தியாவின் உத்தரவாதமான நீர் உரிமையை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கை. ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் முதல் பெரிய நீர்மின் திட்டம் இதுவாகும். ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சி மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு பெரும் ஊக்கமாக அமையும். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.
மக்கள் மத்தியில் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மின்சார தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NHPC தீவிரமாக பணிகளை தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: பாக்., சின்ன தப்பு பண்ணிருந்தாலும்?! மொத்தமா சிதைச்சிருப்போம்! ராணுவ தளபதி தகவல்!