×
 

இந்தியாவை உலுக்கிய 3 பயங்கரவாத தாக்குதல்..! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த ISIS தலைவன் காலி.. யார் இந்த சாகிப் நாச்சன்?

ISIS-ன் இந்திய தலைவரும், தடைசெய்யப்பட்ட இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் (SIMI) முன்னாள் அலுவலகப் பொறுப்பாளருமான சாகிப் நாச்சன் மூளை ரத்தக்கசிவு காரணமாக காலமானார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முக்கிய பயங்கரவாதிகளில் முக்கியமானவர்கள் ஐஎஸ் பயங்கரவாதிகள். ஐஎஸ் அமைப்பின் இந்தியாவுக்கான தலைவனாக இருந்தவன் சாகிப் நாச்சன்  Saquib Nachan. இந்தியாவில் பல கொடூர தாக்குதலை நடத்தியவன். 57 வயதான சாகிப் நாச்சன், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதனையில் அவனுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

உடனே சாஃப்தார்ஜங் மருத்துவமனையில் அவனை போலீசார் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இப்போது அவன் இறந்து விட்டான். சாகிப் நாச்சன் மிகவும் கொடிய பயங்கரவாதி.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் இந்தியாவுக்கான தலைவனாக இருந்தான். மகாராஷ்டிராவின் பத்காவில் பிறந்த இவன் பிகாம் வரை படித்தான். பிசினஸ் செய்து வந்த இவன், பின்னர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தான். 2001ல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதையும் படிங்க: அழகான பொண்ணு வீடியோ கால் பண்ணும்.. காசு கொடுக்கும்.. பாக்., உளவாளி வலையில் விழுந்தவரின் பகீர் வாக்குமூலம்..!

தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தீவிரமாக செயல்பட்ட சாகிப் நாச்சன், 2002, 2003ல் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புகளை முன்னின்று நடத்தினான். முதலில் மும்பை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தது.

இதில் 27 பேர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் வைல் பார்லே பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 25 பேர் காயம் அடைந்தனர். முலுண்ட் ரயில்வே ஸ்டேஷனில் நின்ற ஒரு ரயிலில் குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 82 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு மூளையாக இருந்தவன் சாகிப் நாச்சன் தான். அவனையும் அவனது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்தனர். கைதான போது அவன் கையில் ஏகே-56 ரக துப்பாக்கி இருந்தது. விசாரணை முடிவில் சாகிப் நாச்சனுக்கு கோர்ட் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை முடிந்து 2017 ம் ஆண்டு வெளியே வந்தான். இந்து அமைப்பு தலைவர்களை கொலை செய்ய தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வந்தான். இதற்காக பட்காவில் உள்ள மலை பகுதிகளில் சாகிப் நாச்சான் ஆட்கள் ஆயுத பயிற்சி பெற்றனர்.

2023ல் மீண்டும் சாகிப் நாச்சானை என்ஐஏ கைது செய்தது. அவன் டில்லி மற்றும் மும்பையில் மிகக்கொடிய குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி திட்டம் போட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை கைதியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். இந்த நிலையில் தான் மூளை கசிவு காரணமாக சாகிப் நாச்சன் மரணம் அடைந்து இருக்கிறான்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாக்., பின்னும் ரகசிய சதிவலை.. மீண்டும் கட்டப்படும் பயங்கரவாதிகள் முகாம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share