×
 

அவ்ளோ அசிங்கமா பேசிட்டு ஓட்டுக்காக மட்டும் ஓடி வருவீங்களா? ராகுல்காந்திக்கு மீண்டும் சிக்கல்.. பிரசாந்த் கிஷோர் ஆவேசம்..

பீகாரிகளை தவறாக பேசி வரும் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறினார்.

பீகார் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகளுடன் புதிதாக, பிரசாந்த் கிஷோரின் ஜன ஸ்வராஜ் கட்சியும் களம் இறங்குகிறது. இச்சூழலில், பீகாரிகளை தவறாக பேசி வரும் காங்கிரஸ் தலைவர்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கூறினார். 

பீகாரிகள் கூலி வேலை செய்யவே பிறந்தவர்கள். அவர்களின் DNA-வில் அது ஊறியுள்ளது என, காங்கிரசை சேர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகிறார். இதை, ராகுல்காந்தி வேடிக்கை பார்க்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தன் வாழ் நாளில் ஒரே ஒரு இரவாவது பீகாரின் கிராமங்களில் தங்கியிருக்கிறாரா? எனவும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.

டில்லியில் அமர்ந்து கொண்டு பீகாரிகளைப் பற்றி கேலி பேசுவதும், பீகாருக்கு வரும் போது இங்குள்ள மக்களுக்கு அறிவுரை கூறுவதும் தான் அவரது வழக்கம். காங்கிரசை சேர்ந்த ரேவந்த் ரெட்டி தெலங்கானா முதல்வராகி 2.5 ஆண்டுகள் தான் ஆகிறது. பீகார் மக்கள் உழைப்பதற்காகவே பிறந்தவர்கள் தொழிலாளி என்பது அவர்களின் DNA-வில் ஊறி உள்ளது என ரேவந்த் ரெட்டி கூறுகிறார். இப்போது காங்கிரசில் இருக்கும் அவர் இதற்கு முன் தெலுங்கு தேசம் கட்சியிலும், ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும் இருந்தவர் தானே!

இதையும் படிங்க: உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

கேசிஆர் ஆட்சியில் தெலங்கானாவில் பீகாரை சேர்ந்த ஐஏஎஸ்கள் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டனர். கூலி தொழில் செய்ய தகுதியான பீகாரிகளை முக்கிய பொறுப்பில் அமர்த்துவதா என ரேவந்த் பேசினாரா இல்லையா? தற்போது பீகாருக்கு அடிக்கடி வரும் ராகுல்காந்தி ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சுக்கு பதில் சொல்வாரா?

உண்மையில் ராகுல் காந்திக்கு தைரியம் இருந்தால் பீகார் தேர்தலை காங்கிரஸ் தனித்து சந்திக்கட்டும். இல்லை என்றால் லாலுவிடம் சரிக்கு சரியாக இல்லாவிட்டாலும் 40 சதவீத சீட்களையாவது கேட்டுப் பெறட்டும். ராகுலால் அதை செய்ய முடியுமா?

தெலங்கானா முன்னாள் பிரதமர் சந்திரசேகர ராவ்  பீகாரை சேர்ந்த ஐஏஎஸ்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கினார்.

அதனால் தான், ரேவந்த்துக்கு பீகாரிகளை பிடிக்கவில்லை. டில்லியில் இருக்கும் போது, பீகாரிகளை தரக்குறைவாக பேசும் ராகுல், ஓட்டுக்காக மட்டும்  இங்கு ஓடி வருகிறார். பீகாரில் 35 ஆண்டுகளாக காங்கிரஸ் காணாமல் போயிருக்கிறது. அவர்களுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைத்தால் தேர்தலில் தனித்து போட்டியிட  திராணி இருக்கிறதா? என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: சும்மா நேரத்தை வீணடிக்காதீங்க.. அம்பேத்கர் பேரன் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் நீதிபதிகள் காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share