×
 

காலேஜ் ரூமில் கட்டுக்கட்டாய் பணம்! துப்பாக்கி! ஆணுறைகள்!! மேற்குவங்கத்தில் பகீர்!

மேற்கு வங்கத்தில் உள்ள பழமையான சுரேந்திரநாத் கல்லூரியில் கரையான் அரித்த நிலையில் 1 கோடி ரூபாய் பணம், துப்பாக்கி, மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுரேந்திரநாத் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரையான் அரித்த நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், துப்பாக்கி, மது பாட்டில்கள் மற்றும் ஆடம்பர வசதிகள் கொண்ட அறைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மாநில அரசியலிலும் கல்வித்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதற்கிடையில், கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாணவர் சங்க அறைகளை மூடி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மாணவர் சங்க நிதி மற்றும் செலவினங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவின் பழமையான சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டிருந்த மாணவர் சங்க அறை திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, பழைய மர அலமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டிகளில் கரையான் அரித்த நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், அங்கிருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500இல் இருந்து ரூ.3,000ஆக உயர்வு! சொன்னதை செய்த மேற்குவங்க பாஜக அரசு!

இதையடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் விரிவான சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏர் கண்டிஷனர் வசதியுடன் இரண்டு தனி அறைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த அறைகளில் படுக்கைகள், விலையுயர்ந்த மெத்தைகள், குளியலறை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், கல்லூரி மொட்டை மாடியில் ஏராளமான மது பாட்டில்களும், மாணவர் சங்க அறைகளில் இருந்து ஆணுறை பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், கைப்பற்றப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டறிய மத்திய விசாரணை அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர் சங்க அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: மேற்குவங்காளத்தில் ஆக்சனில் இறங்கிய பாஜக! சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share