கடவுள் தூண்டினார்! நான் செஞ்சேன்! எந்த வருத்தமும் இல்லை! கவாய் மீது காலணி வீசிய வக்கீல் பேச்சு!
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற அறை எண்-1 இல் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் வழக்குகள் குறித்து வழக்குரைஞர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வழக்குரைஞர் காலணியை வீச முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது' என முழக்கமிட்டபடி அவர் தாக்குதல் நடத்த முற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அவர் வெளியேற்றப்பட்டார். இந்திய பார கவுன்சில் அவரது உரிமத்தை உடனடியாக ரத்து செய்தது.
டெல்லி மயூர் விகார் சேத்தில் வசிப்பவர், 71 வயது ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட வழக்குரைஞர், அமர்வின் போது தலைமை நீதிபதி கவாயை நோக்கி காலணியை அகற்றி வீச முயன்றார். உடனடியாக பாதுகாவலர்கள் தலையிட்டு அவரை அறையிலிருந்து வெளியேற்றினர். காலணி எங்கும் விழுந்ததில்லை. தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருந்து, "இது எங்களை பாதிக்காது. கவனம் செலுத்த வேண்டாம்" என வழக்கு விசாரணையைத் தொடர உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸார் உச்சநீதிமன்ற வளாகத்தில் ராகேஷ் கிஷோரை சுமார் மூன்று மணி நேரம் விசாரித்தனர். முறைப்படி புகார் அளிக்கப்படாததால், பிற்பகல் 2 மணிக்குப் பின் அவரை விடுவித்தனர். தலைமை நீதிபதியின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் தெரிகிறது.
இதையும் படிங்க: ஹலோ ராமதாஸ்! நல்லா இருக்கீங்களா! இமயமலையில் இருந்து போன் போட்டு விசாரித்த ரஜினிகாந்த்!
'தனியர் செய்தி சேனலுக்கு ராகேஷ் கிஷோர் அளித்த பேட்டியில், "காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை. சரியானதைச் செய்தேன். சிறைக்குப் போனாலும், துன்பம் அனுபவித்தாலும், அனைத்து விளைவுகளையும் ஏற்றுக்கொண்டே இதைச் செய்தேன். கடவுள்தான் என்னைத் தூண்டினார்" எனத் தெரிவித்தார்.
இந்திய பார கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "ராகேஷ் கிஷோரின் செயல் வழக்குரைஞரின் தொழில்சார்ந்த நடத்தை, சபை ஒழுக்கம் தொடர்பான விதிகளை மீறியது. எனவே, அவரது வழக்குரைஞர் உரிமத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல், கடந்த மே 16 அன்று தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ கோயில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோயிலில் விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்ததை அடிப்படையாகக் கொண்டது.
அப்போது கவாய், "இது விளம்பர நோக்கமான மனு. உங்கள் கடவுளிடம் பதில் கேளுங்கள். சைவ வழிபாட்டுக்கு ஆட்சேபம் இல்லையெனில், அங்கு உள்ள சிவலிங்கத்தை வழிபடுங்கள்" எனக் கூறியது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குப் பின் விளக்கமளித்த கவாய், "என் கருத்துகள் திரிக்கப்பட்டு பரப்பப்பட்டன. அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்" எனத் தெரிவித்தார். 'சனாதன தர்மத்தை அவமதித்தார்' என ராகேஷ் கிஷோர் கருதியதால் இத்தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது.
இச்சம்பவத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சமூக வலைதளங்களில் தவறான தகவல் இதற்குக் காரணம்" என அனுதாபம் தெரிவித்தார். உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (SCAORA) அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
இந்தச் சம்பவம், நீதிமன்ற ஒழுக்கம் மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கத்தைப் பற்றி புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. தலைமை நீதிபதி கவாயின் அமைதியான பதிலை பலர் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் இந்திய பந்தாடிய பாக்., விமானங்கள்! பழுது நீக்கி தரும் அமெரிக்கா! சீனாவுக்கு முட்டுக்கட்டை!