இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்! பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான அறிவிப்புகள்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை ஆற்றி வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் உற்பத்தித் துறையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல ‘பிக் பாங்’ (Big Bang) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாகச் செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கனரக இயந்திரங்கள் தயாரிப்பில் இந்தியாவைத் தற்சார்பு நாடாக மாற்றப் பிரம்மாண்ட நிதி ஒதுக்கீடுகளை அவர் அறிவித்துள்ளார்.
தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள்:
2025 ஏப்ரலில் தொடங்கப்பட்ட மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புத் திட்டத்திற்கு (ECMS) முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் நிதி ஒதுக்கீட்டை ₹22,919 கோடியிலிருந்து ₹40,000 கோடியாக உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இந்தியாவிலேயே முழுமையான ஐபி மற்றும் உபகரணங்களைத் தயாரிக்கும் வகையில் ‘ISM 2.0’ திட்டம் தொடங்கப்படும். இது விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதோடு, தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களையும் உருவாக்கும்.
இதையும் படிங்க: நாடாளுமன்றம் செல்லும் முன் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ‘தயிர்-சர்க்கரை’ ஊட்டி வாழ்த்து!
அரிய வகை தாதுக்களின் இறக்குமதியைக் குறைக்க தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பிரத்யேக அரிய மண் தாது வழித்தடங்கள் அமைக்கப்படும். இது சுரங்கம், சுத்திகரிப்பு மற்றும் உற்பத்திக்கு உதவும்.nமாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மூன்று பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் அமைக்கப்படும். இது ரசாயனத் துறையில் இந்தியாவின் உற்பத்தித் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இரண்டு இடங்களில் ஹை-டெக் டோம் ரூம்கள் அமைக்கப்படும். இவை குறைந்த செலவில் உயர் துல்லிய உதிரிபாகங்களை வடிவமைக்கவும், சோதிக்கவும் உதவும். லிஃப்ட் முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வரை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிக்கப் புதியத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
உலகளாவியப் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் கண்டெய்னர் உற்பத்திச் சூழலை உருவாக்க ₹10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஜவுளித் துறைக்காக ‘தேசிய இழைத் திட்டம்’ உள்ளிட்ட 5 துணைப் பிரிவுகளைக் கொண்ட ஒருங்கிணைந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி மையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் பிரத்யேக அறிவியல் நிபுணர்கள் குழு நியமிக்கப்படும். இதன் மூலம் மருந்து ஒப்புதல் பெறுவதற்கான கால அளவு குறைக்கப்பட்டு, உலகளாவியத் தரங்களுக்கு நிகராக மாற்றப்படும்.
இதையும் படிங்க: 9-வது முறை பட்ஜெட் தாக்கல்.. ஞாயிற்றுக்கிழமையில் வரலாறு படைக்கும் நிர்மலா சீதாராமன்!