மக்கள் உரிமை யாத்திரை... தொண்டர்கள் சூழ ராகுல், தேஜஸ்வி யாதவ் பைக் பயணம்
ராகுல்காந்தி மேற்கொள்ளும் வாக்காளர் உரிமை யாத்திரையில் தேஜஸ்வி யாதவ் கலந்துக் கொண்டார்.
ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை என்பது இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையையும், நியாயத்தையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் முயற்சியாகும். இந்த யாத்திரை, குறிப்பாக பீகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
வாக்காளர் அதிகார யாத்திரையின் முதன்மை நோக்கம், தேர்தல் முறைகேடுகளை எதிர்ப்பது மற்றும் வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது. முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது. ராகுல் காந்தி இந்த யாத்திரையை அரசியல் சாசனத்தைக் காக்கும் போராட்டம் என்று ராகுல் காந்தி கூறி இருந்தார்.
இந்த யாத்திரையை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகஸ்ட் 17 அன்று பீகாரின் சசாரம் பகுதியிலிருந்து தொடங்கினார். வாக்குத் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகள் தேர்தல் முடிவுகளை பாதிக்கக் கூடியவை என்பதால், இவற்றை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: கான்ஸ்டபிள் மீது மோதிய வாகனம்.. ராகுல் காந்தியின் டிரைவர் மீது பாய்ந்த FIR..!!
இன்று நடைபெற்ற யாத்திரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். 'வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் தொண்டர்களுடன் பூர்ணியாவில் வாக்காளர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரட்டும்.. தேர்தல் ஆணையத்துக்கு அப்ப இருக்கு கச்சேரி! ராகுல் காந்தி திட்டவட்டம்..!