×
 

கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன்; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்!!

சித்தூர் மாவட்டம் குப்பத்தில் கணவர் கடன் பெற்று ஊரை வீட்டு சென்றதால் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கடனை செலுத்துமாறு கூறி அவமானப்படுத்திய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிரிஷா என்ற 25 வயது பெண், திம்மராயப்பா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். திம்மராயப்பா 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த முனிகண்ணப்பாவிடம் 80,000 ரூபாய் கடன் வாங்கினார். கடனை செலுத்த முடியாத  திம்மராயப்பா, தனது மனைவி சிரிஷா  மற்றும்  குழந்தைகளை விட்டு  கிராமத்தில் இருந்து சென்று விட்டார்.  

இதனால் பிள்ளைகளுடன் தனியாக வசித்து கொண்டு கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியை வைத்து பிள்ளைகளை கவனித்து வருகிறார். இந்த நிலையில் சிரிஷா சாலையில் நடந்து செல்லும்போது, ​​கடனை செலுத்த முடியாமல் எங்கே செல்கிறாய் என்று ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கடனை செலுத்தாவிட்டால் கொலை செய்து விடுவதாக முனிகண்ணப்பா மற்றும் அவரது மனைவி மிரட்டி உள்ளார். அத்துடன் நிற்காமல் சிரிஷாவை இழுத்துச் சென்று  வேப்ப மரத்தில் கயிற்றால் கட்டி வைத்து தாக்கினார். இதனை கவனித்த கிராம மக்கள் செல்போனில் படம் பிடித்த நிலையில்  முனிகண்ணப்பா அவர்களையும் தாக்கினார்.

இதையும் படிங்க: ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்...2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

இதனால் குப்பம் போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த தெலுங்கு தேச  கட்சி நிர்வாகி  முனிகண்ணப்பா மீது பி.என்.எஸ். 341/323/324/506/34/ பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து முனிகண்ணப்பாவை கைது செய்தனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share