புருஷனை கொல்லுறப்போ கைகட்டியா நிப்பீங்க! பெண்களுக்கு வீரமே இல்லை! பாஜ எம்.பி சர்ச்சை பேச்சு..!
பஹல்காமில் பயங்கரவாதிகளால் கணவர்களை இழந்த பெண்களிடம், வீரம், வைராக்கியம் இல்லை. அவர்களின் குங்குமத்தை பயங்கரவாதிகள் பறித்தபோது, வீரம் இல்லாமல் கைகளை கட்டிக் கொண்டு இருந்து விட்டனர்.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய படைகளின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை, உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் திரித்து பரப்பும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவிற்கு நெருக்கமான, உலக அரங்கில் வலியாமையாக உள்ள 33 நாடுகளிடம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியாவுக்கு ஸ்கெட்ச்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கதேசம்..!
இந்த நிலையில் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கணவர்களை இழந்த பெண்களிடம், வீரம் மிகுந்த குணங்கள், வைராக்கியம் இல்லை. அவர்களின் குங்குமத்தை பயங்கரவாதிகள் பறித்தபோது, வீரம் இல்லாமல் கைகளை கட்டிக் கொண்டு இருந்து விட்டனர் என பா.ஜ., மாநிலங்களவை எம்.பி ராம் சந்தர் ஜங்ரா சர்ச்சையான கருத்தை தெரிவித்து உள்ளார்.
ஹரியானா மாநிலம் பிவானியில், மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பாஜக எம்,பி ராம் சந்தர் ஜங்ரா கலந்து கொண்டார். அதில், ராம் சந்தர் ஜங்ரா பேசுகையில், ''பஹல்காமில் பயங்கரவாதிகளால் கணவர்களை இழந்த பெண்களிடம், வீரம் மிகுந்த குணங்கள், வைராக்கியம் இல்லை. அவர்களின் குங்குமத்தை பயங்கரவாதிகள் பறித்தபோது, வீரம் இல்லாமல் கைகளை கட்டிக் கொண்டு இருந்து விட்டனர்.
'இதனால் அவர்களது தோட்டாக்களுக்கு இரையாகி விட்டனர். அக்னி வீர் திட்டத்தை போல, சுற்றுலா பயணியரும் பயிற்சி பெற்றிருந்தால், வெறும் நான்கு பயங்கர வாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது. ''நம் பெண்கள் சண்டையிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், உயிரிழப்புகள் குறைந்திருக்கும்,'' என்றார். பா.ஜ., -- எம்.பி.,யின் கருத்துக்கு, காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சர்ச்சை பேச்சு குறித்து ராம் சந்தர் ஜங்ராவிடம் விளக்கம் அளித்துள்ளார். ''மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கர் ஒரு பெண்; ஜான்ஸி ராணி லட்சுமிபாயும் அப்படித்தான்; அவர்கள் சண்டையிடவில்லையா? அவர்கள் போலவே, நம் சகோதரிகளும் தைரியமாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,'' என விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலோடு முடியப்போறது இல்லை.. பாக்., ஐ.எஸ்.ஐ-யின் அடுத்த பிளான் தெரியுமா? பகீர் கிளப்பும் என்.ஐ.ஏ!!